காரைக்கால்

ன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

இன்று காரைக்கால் மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழா இரவு நடக்கிறது. எனவே காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“காரைக்கால் மஸ்தான் சாகிப் கந்தூரி விழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது.  

இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற மார்ச் 9-ந் தேதி பள்ளி நடைபெறும்.” 

என்று கூறப்பட்டுள்ளது.