டில்லி

ரும் 24 ஆம் தேதி அன்று ராகுல் காந்தியின் நியாய் யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளர்.

இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியாய் யாத்திரை என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 15 மாநிலங்களை உள்ளடக்கிய 6,700 கி.மீ. தொலைவை நடைப்பயணம் வழியே கடந்து செல்ல திட்டமிட்டு உள்ளார்.

ராகுலின் யாத்திரையில், அவருடைய சகோதரி மற்றும் காங்கிரஸ் பொது செயலாளரான பிரியங்கா காந்தி கடந்த 16-ந்தேதி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருடைய உடல்நலம் பாதித்த நிலையில், அவரால் அதில் பங்கேற்க முடியவில்லை.

பிரியங்கா டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நீரிழப்பு மற்றும் வயிற்று வலி சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார். எனவே, ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் வருகிற 24-ந்தேதி அன்று உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில், பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார் எனத்தெரிய வந்துள்ளது.