சென்னை

சென்னை நகரில் நடைபெற்ற ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்வில் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை உற்சாகமாகக் கொண்டாடினர்.

தலைநகர் சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜி.பி.சாலை சந்திப்பு வரை உள்ள பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் (மகிழ்ச்சி தெரு) கொண்டாட்ட நிகழ்ச்சி, ஏப்ரல் 30-ந்தேதி மற்றும் மே 7, 14, 21-ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இதற்காக அன்றைய தினங்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி,சென்னை அண்ணா சாலையில் தொடர்ந்து 4-ஆவது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சியுடன் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன. நிகழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடல், பாடலுடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் மத்தியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காவல் துறையினரால் நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.