பெங்களூரு

ன்று மாலை பெங்களூருவில் கூட உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கர்நாடக முதிய முதல்வர் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 10 ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ நடைபெற்ற தேர்தலில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. நேற்று இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் 136 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. பாஜக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை பசவராஜ்  பொம்மை ராஜினாமா செய்தார்.

தற்போது தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும் கனகபுரா தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 595 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்ற கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. கட்சி மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக இருவருமே தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை புதிய முதல்வ‌ரை தேர்ந்தெடுப்பதற்காக பெங்களூருவில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது அடுத்த முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக மூன்று பார்வையாளர்களைக் காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. அவர்கள் இன்று நடைபெற உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பான அறிக்கையைக் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.