சிம்லா
இன்று இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று மதியம் 1.16 மணிக்கு இமாச்சலப்பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகி உள்ளது.
பூமிக்கடியில் 9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சம்பா மாவட்டத்தின் சில பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன. இதைத் தவிர இங்குப் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
Patrikai.com official YouTube Channel