போர்ட் பிளேர்
இன்று அந்தமான் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு அந்தமான்நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பாட்டுளது.
இந்த நில நடுக்கம் போர்ட் பிளேர் நகரின் தென் கிழக்கே 165 கிமீ தொலைவில் ஏற்பட்டுள்ளது.
தேசிய புவியியல் மையம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வரவில்லை.
Patrikai.com official YouTube Channel