சென்னை

ன்று தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது..

ஒவ்வொரு ஆண்டும் இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அவ்வகையில் இன்று, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்குகிறது.

இன்று தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் தொடக்கமாக, தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இன்று மாவட்ட அளவிலான பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர்.

இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் வரும் நவம்பர் 4, 5, 18, 19-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இங்கு பங்கேற்றும் விண்ணப்பங்களை அளிக்கலாம். பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெறும். இந்த பணியின் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட உள்ளது.