சென்னை

ன்று முதல் தமிழகத்தில் காலியாக உள்ள86 எம் பி பி எஸ் இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மத்திய அரசின் வசம் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக மொத்தம் உள்ள காலியிடங்களில் 15 சதவீத இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வை மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக நடத்தி வருகின்றன.

தற்போது 86 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய சுகாதாரத் துறைக்குக் கடிதம் எழுதி இருந்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

எனவே காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் தேதியை மாநில அரசு முன்னதாக அறிவித்து இருந்தது. இன்றுடன் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு முடிவடைகிறது.

தையொட்டி  மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.