டில்லி

ன்று நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர்

 

நாட்டில் கடந்த சில நாட்களாக அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன.  இதற்கு எதிர்க்கட்சிகள் தொட்ர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   ஆனால் ஆளும் பாஜக தரப்ப்ல் இருந்து இதற்கு எவ்வித பலனும் ஏற்படாமல் உள்ளது. 

எனவே காங்கிரஸ் கட்சி இன்று நாடெங்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.  இந்த  போராட்டம் விலைவாசி உயர்வு, பணி இன்மை, பணவீக்கம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று நாடு மூழ்வதும் நடைபெற உள்ளது.

இன்று இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் இல்லத்தை முற்றுகையிடக் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.  இன்றைய போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.