சென்னை

ன்று சென்னையில் இருந்து விமானம் மூலம்  முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சிக்கு செல்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இவர்களைச் சந்திக்க இருக்கிறார். இதையொட்டி தமிழகத்தில் உள்ள தி.மு.க. மாவட்டங்களை 5 மண்டலமாகப் பிரித்து, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளையும், தேவையையும் கேட்க தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் இன்று  நடைபெறுகிறது.  மாநாட்டுக்காக 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய, திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு ஆகிய 15 தி.மு.க. மாவட்டத்துக்கு உட்பட்ட டெல்டா மாவட்டங்களில் 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் மாலை 5 மணிக்குக் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். திருச்சி மாவட்ட திமுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறகு டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்லும் முதல்வர், அங்கு மதிய உணவு அருந்திவிட்டு, ஓய்வு எடுக்கிறார். பிறகு அவர், மாலை 5 மணிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.  முதல்வர் வருகையையொட்டி மாவட்டத்தில் பாதுகப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.