சென்னை

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் அதற்கு முன்னேற்பாடாக மழைநீர் தேங்காமல் இருக்கப் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். சென்னையில் பாடி, திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

இதைத் தவிர முதல்வர் மு க ஸ்டாலின் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையிலுள்ள தணிகாச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியைத் தொடங்கி வைக்க உள்ளார்.