டில்லி

சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு முதல் பருவ தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.

நாடெங்கும் சி பி எஸ் இ முறையில் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த தேர்வு இன்று முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரையில் நடைபெறும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று முதல் சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தொடங்க உள்ளது.  இந்த முதல் பருவத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நல்ல முறையில் நடத்த வேண்டும் என சி பி எஸ் இ நிர்வாகம் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் அனைவரும் இந்த சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு முதல் பருவ தேர்வு எழுத மிகுந்த ஆர்வத்துடனும் தயார் நிலையிலும் உள்ளனர்.  குறிப்பாக கொரோனா பாதிப்புக்குப் பிறகு நடக்கும் முதல் பருவத் தேர்வு என்பதால் இந்த தேர்வுக்கு மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது.