பிரயாக் ராஜ்

ன்று பிய்ரயாக் ராஜ் திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா உ பி முதல்வருடன் புனித நீராடியுள்ளார்.

தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை  நடைபெறும் இந்த நிகழ்வு  ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வழிபடுவார்கள். பலரும் மகா கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை புனிதமாக கருதுகின்றனர்.

விழாவில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கேற்ப பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி   உத்தரவிட்ட உஇந்த கும்பமேளா நிகழ்வில் இதுவரை 10கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசியல் தலைவர்கள்  தற்போதைய மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். டி இன்று (ஜன.27)  பிரயாக்ராஜ் சென்ற  உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் திரிவேணி சங்கமத்தில் நீராடினர். இந்த புனித நீராடலில்  ஐசிசி தலைவர் ஜெய் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.