சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 1,345 பேரும் கோவையில் 2,319 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 17,321 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,92,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 28,170 பேர் உயிர் இழந்து 20,59,597 பேர் குணம் அடைந்து தற்போது 2,04,258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 1,345 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,20,877 பேர் பாதிக்கப்பட்டு 7,613 பேர் உயிர் இழந்து 4,98,586 பேர் குணம் அடைந்து தற்போது 14,7678 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 2,319 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உ ள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 1,94,362 பேர் பாதிக்கப்பட்டு 1,638 பேர் உயிர் இழந்து 1,69,702 பேர் குணம் அடைந்து தற்போது 24,022 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,48,732 பேர் பாதிக்கப்பட்டு 2,146 பேர் உயிர் இழந்து 1,40,988 பேர் குணம் அடைந்து தற்போது 5,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.