சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 1,971 பேரும் கோவையில் 2,810 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 22,651 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 21,95,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 26,128 பேர் உயிர் இழந்து 19,00,306 பேர் குணம் அடைந்து தற்போது 2,68,968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,13,229 பேர் பாதிக்கப்பட்டு 7,362 பேர் உயிர் இழந்து 4,79,145 பேர் குணம் அடைந்து தற்போது 26,722 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 3,364 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உ ள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 1,82,708 பேர் பாதிக்கப்பட்டு 1,425 பேர் உயிர் இழந்து 1,45,589 பேர் குணம் அடைந்து தற்போது 35,694 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,44,639 பேர் பாதிக்கப்பட்டு 2,016 பேர் உயிர் இழந்து 1,34,599 பேர் குணம் அடைந்து தற்போது 8,024 பேர் சிகிச்சையில் உள்ளனர்.