பெங்களூரு

ன்று காவிரி விவகாரம்  குறித்து கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்துக்குக் கர்நாடக அரசு காவிரி தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.  எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் காவிரியில் கூடுதல் நீர் திறந்து விடக் கோரி மனுத்தாக்கல் செய்தது.

தமிழக அரசு இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரிக்கை விடுத்த நிலையில், காவிரி வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.

உச்சநீதிமன்றம் அதன்படி காவிரி வழக்கை விசாரிக்க 3 பேர் அடங்கிய புதிய அமர்வை நியமித்துள்ளது. இவ்வழக்கு 57 வது வழக்காகப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், வரும் 25ம் தேதி உச்சநீதிமன்ற புதிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.

இன்று காவிரி விவகாரம் குறித்து முடிவெடுக்க, கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது  உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வேளையில் இக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.