டில்லி
இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 993 டில்லியில் 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 9,00,805 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை 7,213 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 480 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,86,978 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 6,614 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.
டில்லியில் இன்று 992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 6,60,611 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 11,016 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,591 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 6,42,166 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,429 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இ டத்தில் உள்ளது.