சென்னை

மிழகத்தில் இன்று 7,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 61,329 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,65,829  பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,05,23,529 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 7,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 3 பேர் வந்துள்ளனர்.

இதுவரை  24,29,924  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 189 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 31,386 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 15,281  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 23,37,209  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 61,329  பேர் சிகிச்சையில் உள்ளனர்.