சென்னை

மிழகத்தில் இன்று 731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,29,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,06,505 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,46,81,905 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தும் 4 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர்.  இதுவரை 27,29,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,519 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 753 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,85,203 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 8,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,58,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 8,614 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 124 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,48,722 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,175 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 130 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,50,681 பேர் பாதிக்கப்பட்டு 2,471 பேர் உயிர் இழந்து 2,46,926 பேர் குணம் அடைந்து தற்போது 1,284 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,022 பேர் பாதிக்கப்பட்டு 2,534 பேர் உயிர் இழந்து 1,70,856 பேர் குணம் அடைந்து தற்போது 632 பேர் சிகிச்சையில் உள்ளனர்.