சென்னை

மிழகத்தில் இன்று 711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,29,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,02,673 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,45,75,400 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தும் 6 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர்.  இதுவரை 27,29,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,513 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 759 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,84,450 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 8,098 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,58,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 8,614 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 122 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,48,598 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,170 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 127 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,50,550 பேர் பாதிக்கப்பட்டு 2,469 பேர் உயிர் இழந்து 2,46,813 பேர் குணம் அடைந்து தற்போது 1,267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,73,962 பேர் பாதிக்கப்பட்டு 2,534 பேர் உயிர் இழந்து 1,70,795 பேர் குணம் அடைந்து தற்போது 633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.