சென்னை

மிழகத்தில் இன்று 710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,31,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,00,393 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,49,85,621 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் மேற்கு வங்கத்தில் இருந்து இருவர் வந்துள்ளனர்.   இதுவரை 27,31,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,549 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 731 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,87,414 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 7,982 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,58,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று இருவர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,619 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 97 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,49,048 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,212 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 122 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,51,050 பேர் பாதிக்கப்பட்டு 2,474 பேர் உயிர் இழந்து 2,47,311 பேர் குணம் அடைந்து தற்போது 1,265 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,200 பேர் பாதிக்கப்பட்டு 2,537 பேர் உயிர் இழந்து 1,71,041 பேர் குணம் அடைந்து தற்போது 622 பேர் சிகிச்சையில் உள்ளனர்.