சென்னை

மிழகத்தில் இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 49,845 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,67,268  பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,10,18,415 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் 3 பேர் ஆந்திராவில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை  24,49,577  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 155 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 31,901 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 9,046  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 23,58,785  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 49,845  பேர் சிகிச்சையில் உள்ளனர்.