சென்னை

மிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,42,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,00,284 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,69,26,717 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து 8 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 27,44,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,735 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 679 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,00,673 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 6,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,61,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 8,645 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 129 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,51,296 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 89 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,52,975 பேர் பாதிக்கப்பட்டு 2,504 பேர் உயிர் இழந்து 2,49,446 பேர் குணம் அடைந்து தற்போது 1,021 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,75,125 பேர் பாதிக்கப்பட்டு 2,546 பேர் உயிர் இழந்து 1,72,095 பேர் குணம் அடைந்து தற்போது 487 பேர் சிகிச்சையில் உள்ளனர்.