சென்னை

மிழகத்தில் இன்று 607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,42,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,03,938 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,66,22,301 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து 6 பேர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து 5 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 27,42,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,707 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 689 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,97,628 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 6,889 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,60,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று இருவர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,642 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 139 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,50,894 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,325 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 92 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,52,707 பேர் பாதிக்கப்பட்டு 2,502 பேர் உயிர் இழந்து 2,49,894 பேர் குணம் அடைந்து தற்போது 1,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,74,969 பேர் பாதிக்கப்பட்டு 2,545 பேர் உயிர் இழந்து 1,71,926 பேர் குணம் அடைந்து தற்போது 498 பேர் சிகிச்சையில் உள்ளனர்.