சென்னை:  தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119  கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள னர்.  இதுவரை  பலியானோர்  எண்ணிக்கை 4,690ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,27,575 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, சென்னையில்  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,85,024ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 67,352 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று மட்டும் 65,189 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 29,75,657 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.