டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 585, கர்நாடகாவில் 2,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 2,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,75,955 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,461 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 996 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,46,589 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,95,121 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை 7,197 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 251 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,84,978 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 2,946 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.