சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5609 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  2,63,222 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில்  5800 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 57.99% ஆக உள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 56,698 பேர்.

இன்று மட்டும் அதிகப்பட்சமாக 109 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4241 ஆக அதிகரித்த உள்ளது.

இன்று 58,211 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுவரை 28,37,273 பேருக்கு தமிழகத்தில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 122 கொரோனா சோதனை ஆய்வகங்கள் உள்ளன.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 58,211 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,609 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,59,435 ஆண்கள், 1,03,760 பெண்கள், 27 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

உத்தரபிரதேசம் –  01, கேரளா – 07, கர்நாடகா – 10, தெலுங்கானா – 01,  ஆந்திரப்பிரதேசம் – 01, ஜம்மு ; காஷ்மீர் – 01, டெல்லி – 01, அரியானா – 01, மகாராஷ்டிரா – 01,  ராஜஸ்தான் – 01, மேற்குவங்கம் – 01

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்: ஐக்கிய அரபு நாடுகள்  – 04, ஓமான் – 01, சவூதி அரேபியா – 01