பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 310 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,82,399 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,922 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 347 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,34,870 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,578 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,59,122 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை 14,286 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 557 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,38,248 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,588 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.