டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 310, கர்நாடகாவில் 1,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 1,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,71,647 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,444 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 661 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,44,917 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 14,267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,94,044 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று இருவர் உயிர் இழந்து இதுவரை 7,191 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 114 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,84,471 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.