மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 12,42,770 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 392 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 33,407 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 20,206 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 9,36,554 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,72,410 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.