டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,288 டில்லியில் 3,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,04,548 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை 7,225 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 610 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,87,508 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 8,815 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 3,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 6,68,814 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,050 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,084 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,45,770 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 11,994 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.