செங்கல்பட்டு:

சென்னையைத் தொடர்ந்து அண்டை மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் மேலும்  108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை (16/06/202 மாலை நிலவரம்)  3271 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்ட நிலையில்,  1597 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.  1640 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில்,  இன்று ஒரே நாளில் 108 பேருக்கு புதிதாக  கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள உள்ளது. மேலும் 3 பேர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.