சென்னை

மிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க அனுமதிப்பது குறித்து இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் தமிழக தொழில்துறை சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. தமிழக தொழில்துறை இந்த மாநாட்டை வெற்றிகரமாக முடிப்பதோடு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பல புதிய தொழில்களைத் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும் தமிழக அரசுக்குப் பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் அனைத்து அமைச்சருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அழைப்பில், இன்று மாலை 6.30 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் நிலையில் அதற்கு முன்பு சில தொழில்களுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்க வேண்டியதுள்ளதால் இந்த கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.