ஐதராபாத்: ஆந்திராவில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஆந்திராவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அந்தவ கையில் ஆந்திராவில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.