சென்னை

ட்டு புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம்.

”தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கான தொகுப்பு சதவீத சலுகை வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்குச் சிறந்த துறைமுக கட்டமைப்பு அவசியம் என்பதால், தமிழக துறைமுக மேம்பாட்டுக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

அமைச்சரவைக் கூடத்தில் தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இந்த ஒப்புதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி,கோவை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டின் மூலம் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க அளிக்கப்பட்டுள்ளது. 

அதாவது விண்வெளி ஆராய்ச்சி, மின் வாகனம் உள்ளிட்ட தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வரவுள்ளது. மேலும் திருச்சி, சேலம் மாவட்டங்களில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு நிலம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. ” 

என்று தெரிவித்துள்ளார்.