சென்னை

தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவதை விமர்சித்துள்ளார்.

 

நேற்று சென்னையில் எல்லோருக்கும் எல்லாம்’ பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது  இந்த நிகழ்வில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார்.

அமைச்சர் தனது உரையில்,

” புயல் தாக்கியபோதும், வெள்ளம் பாதித்தபோதும், நீட் தேர்வால் 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டபோதும், பல போராட்டங்களில் விவசாயிகள் மாண்டுபோனபோதும், ஆளுநர் என்ற பெயரில் ஒருவரை இங்கு உட்கார வைத்துவிட்டு பிரச்சினைகள் ஏற்படும் சமயங்களிலும், நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போதும் கூட பிரதமர் மோடி வரவில்லை.

தற்போது அடிக்கடி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து அழிப்பேன், ஒழிப்பேன் என்கிறார்.  அவர் அடிக்கடி வருகிறார் என்றால் அது தேர்தலுக்காக மட்டும்தான்.  ஆட்சிக்கு வரும் போது வறுமையை ஒழிப்போம் என்ற மோடி வறுமையை ஒழித்தாரா?  ஆனால் தி.மு.க.வை ஒழிப்பேன் என்று பேசிக்கொண்டிருக்கிறார். 

தமிழகத்தில் சுமார் 2.2% பேர் மட்டும் தான் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் நிதி ஆயோக் கூறுகிறது. முதல்வர் மு க ஸ்டாலின் அந்த மக்களுக்கும் எல்லாம் சென்றடைய வேண்டும் என்று அதற்கான திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார். 

பாஜகவினருக்கு இதையெல்லாம் பார்த்து பொறாமை ஏற்பட்டுள்ளது.  நாம்’திராவிட மாடல் என்ற பெயரில் அனைவரது வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொண்டே போனால் தாங்கள் எப்படி அரசியல் செய்வது?’ என்பதுதான் பிரதமர் மோடியின் ஒரே கவலை.” 

என்று கூறி உள்ளார்.