சென்னை

மிழக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்களின் வருகையைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககந்தீப் சிங் பேடி கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,

“அனைத்து அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வருவதை மாவட்ட ஆட்சியர்கள் தனிப்பட்ட கவனத்தில் கொண்டு கண்காணிக்க வேண்டும்.

மருத்துவர் கல்லூரி மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவுகளில் சரியான நேரத்தில் மருத்துவர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும்.  புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்கள் காலை 7.30 மணிமுதல் பகல் 12 மணிவரை மருத்துவமனையில் இருப்பது கட்டாயம்.

இங்கு பிற மருத்துவர்கள் காலை 9 மணிமுதல் 4 மணிவரை இருக்க வேண்டும். மருத்துவ கண்காணிப்பாளர் காலை 8 மணிக்கு பணியில் இருக்க வேண்டும். அவசரக்கால அடிப்படையில் 24 மணிநேரமும் தொடர்பில் இருக்க வேண்டும். புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்கள் காலை 7.30 மணிமுதல் பகல் 12 மணிவரை மருத்துவமனையில் இருப்பது கட்டாயம்.

மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணிநேர ஷிப்டுகளில் இருக்கும் மருத்துவர்கள் மாலை 3 மணிமுதல் 5 மணிவரை புறநோயாளிகளை பரிசோதனை செய்ய வேண்டும்.  பல் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் காலை 8 மணிமுதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 மணிமுதல் 5 மணி வரையும் பணியில் இருக்க வேண்டும்.  தலைமை மருத்துவர்கள் காலை 7.30 மணிமுதல் 1.30 மணி வரையும், மாலை 3 மணிமுதல் 5 மணிவரையும் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

சுகாதார நிலையங்களில்  1 முதல் 3 மருத்துவ அதிகாரிகளை கொண்ட சுகாதார நிலையங்களில் காலை 9 மணிமுதல் 4 மணிவரை மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்க்க வேண்டும்.  5 மருத்துவ அதிகாரிகளைக் கொண்ட சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் ஷிப்ட் அடிப்படையில் மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்க்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் மாவட்ட மருத்துவமனைகளில் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.