டில்லி

ன்று துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சந்தித்துப் பேசினார்.

நேற்று காலை 10 மணிக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். அவர் டில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டு இருந்தார்.

அவர் இன்று ,டில்லியில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவைச் சந்தித்துப் பேசவும் நேரம் கேட்டு உள்ளார்.

அவர் தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆளுநர் மாதாந்திர அறிக்கை கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.  தவிர சில சட்ட நிபுணர்களையும் சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  ஆளுநர் ஆர் என் ரவி டில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்