டில்லி

நேற்று தமிழக் ஆளுநர் ஆர் என் ரவி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐ சந்தித்துப் பேசி உள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர் என் ரவி கடந்த செப்டம்பர் 18 ஆம் தெதி பொறுப்பேற்றார்.   அவர்  பதவி ஏற்ற பிறகு இரண்டாம் முறையாகக் கடந்த 22 ஆம் தேதி டில்லி சென்றுள்ளார்.  அங்கு அவர் பிரதமர் மோடியை நேற்று முன் தினம் சந்தித்துப் பேசி உள்ளார்.    

இதைத் தொடர்ந்து அவர் நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐ சந்தித்து பேசி உள்ளார்.  

வழக்கமாக மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திப்பார்கள்.  தற்போது தமிழக ஆளுநர் பாதுகாப்புத் துறை அமைச்சரைச் சந்தித்துள்ளது பல ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது.   

தமிழக ஆளுநர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு தொழில் வழித்தட திட்டம் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.  மேலும் நீண்ட கடற்பரப்பைக் கொண்ட தமிழகம் எல்லையோர மாநிலம் என்பதால் பாதுகாப்பு தொடர்பாகவும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் குறித்தும் ஆலோசனை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.