சென்னை

பொதுமக்களுக்குத் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் இந்தியாவின் 77ஆம் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“இந்திய நாட்டின் 77- வது சுதந்திர தினத்தன்று தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் விரிவான நல்வாழ்வுக்கு அன்பான நல்வாழ்த்துக்கள். நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளின்படி இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்றுக் கொள்வோம்”

என்று தெரிவித்துள்ளார்.