சென்னை: எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 முதல்வர் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம் கூட்டம் இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தொடங்கியது.

நிகழ்ச்சியில்  பேசிய முதலமைச்சர், அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பரே அரசின் இலக்கு.. ஒன்றிய அரசின் 6 திட்டங்கள் இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் . சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான வளர்ச்சி இருக்க வேண்டும். கடைக்கோடி குடிமகனுக்கும் திட்டம் போய் சேர வேண்டும் என தெரிவித்தார்

தமிழகம் முழுவதும் ரூ.6,000 கோடி செலவில் பண்ணை குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் பேசினார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் திறன் வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.