சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 8947 பேர் மரணம் அடைந்து 4,97,377 பேர் குணம் அடைந்து தற்போது 46,350 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.

சென்னையில் 1,57,614 பேர் பாதிக்கப்பட்டு 3091 பேர் உயிர் இழந்து 1,44, 511 பேர் குணம் அடைந்து 10,012 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 33,030 பேர் பாதிக்கப்பட்டு 526 பேர் உயிர் இழந்து 30,223 பேர் குணம் அடைந்து 2,,281 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 30,582 பேர் பாதிக்கப்பட்டு 524 பேர் உயிர் இழந்து 28,391 பேர் குணம் அடைந்து 1,667 பேர் சிகிச்சையில் உள்ளனர்.