சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.   கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா  பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.  இதையொட்டி மக்கள் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன.  தவிர இரண்டாம் கொரோனா அலை காரணமாக மூடப்பட்ட திரையரங்குகளின் உரிமையாளர்கள் மீண்டும் திறக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலயில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.  தவிரத் தமிழகத்தில் பள்ளிகள், திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வர் கருத்துக்களைக் கேட்டறிய உள்ளார்.