சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அரசு முறை பயணமாக துபாய் செல்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி துபாயில் தொடங்கிய உலக எக்ஸ்போ கண்காட்சி வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  மார்ச் 25 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை இக்கண்காட்சியில் தமிழ்நாடு வாரம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் செல்கிறார்.

தமிழக அரசு இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,

முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை வரும் 25 ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார்   இதில் தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், தொழில் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதுல் என முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில், காட்சிப் படங்கள் தொடர்ச்சியாகத் திரையிடப்பட உள்ளன.  இந்த உலக கண்காட்சியில் பங்கேற்றுள்ள 192 நாடுகளுக்கும் பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டு  அரங்கை சுமார் இரண்டரை கோடி பேர் பார்வையிட உள்ளனர்.

 முதல்வர் ஸ்டாலின் துபாய் மட்டுமின்றி அபுதாபிக்கும் செல்கிறார்.  அவர் அங்கு தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களையும், துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார். தவிர புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.