சென்னை

முதல்வர் மு க ஸ்டாலின் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கும் நூறபாலைகளுக்கும் மின் கட்டணங்களை மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகைகள் அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி முதல்வர் மு க ஸ்டாலின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்குச் சலுகைகள் அறிவித்துள்ளார்.

முதல்வர் தனது அறிவிப்பில்.

”பருவ கால தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின் பளுவைக் கொண்ட தாழ் வழுத்த ஆலைகளுக்கு நிலை கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அனுமதிக்கப்பட்ட மின் பளுவைக் குறைத்துக் கொள்ளவும் தேவைப்படும்போது உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படும்.

மேலும் நூற்பாலைகளின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இதைப் போலவே மின்கட்டண முறை மாற்றி அமைக்கப்படுகிறது.“

என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.