சென்னை

ரும் செப்டம்பர் 1 முதல் கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதால் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளும் தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.  இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  மேலும் பள்ளிகளுக்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்,  இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மா சுப்ரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

கூட்டத்தில் தற்போதைய கொரோனா பரவல் நிறுவனம், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிய வந்துள்ளது..  மாணவர்களிடையே கொரோனாவை கண்டறிவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.