ரவக்குறிச்சி

மிழக சட்டப்பேரவை அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அணியில் பாஜக இணைந்து போட்டியிட்டது.  அந்த கட்சிக்கு கூட்டணியில் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன.   இதில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிட்டுள்ளார்.

வரும் மே மாதம் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உ ள்ளது.  இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவர் இந்த தகவலை தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே பல வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.   இன்று காலை காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளார்.  இந்நிலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதியானது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.