திருப்பதி:
திருப்பதி கோவில் சொத்துக்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கபட்டுள்ளது.

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பான கூட்டம், தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி மற்றும் இணை செயல் அதிகாரி சதா பார்கவி தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை அந்நியர்கள் பலர் ஆக்கிரமிக்கும் வேலைகளில் ஈடுபட்டது தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருப்பதி கோவில் சொத்துக்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கபட்டுள்ளது. இந்த குழுவுக்கு
செயல்வீரர்கள் குழு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலப்பகுதிகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.