டில்லி

டில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 10000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (15-ந் தேதி) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றுகிறார்.

இதற்காகத் தலைநகர் டில்லி உட்பட நாடு முழுவதும் உச்சக் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டில்லி செங்கோட்டையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திர தின விழா கொண்டாடும் பகுதியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் பாதுகாப்புப் பணியில் சுமார் 10000 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் 1,000 சிசிடிவி கேமரா பொருத்திக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. டில்லி செங்கோட்டைப் பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.