மோதிஹரி

பீகார் மாநிலத்தில் ஒரு செவிலியரை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்று உடலை ஆம்புலன்சில் வீசி உள்ளனர்.

பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டம் மோதிஹரி நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு 30 வயது பெண் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கணவரை இழந்தவர் ஆவார் இவருக்கு 4 வயதில் குழந்தை உள்ளது.

செவிலியரை அதே மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர் மற்றும் சக ஊழியர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இந்த மாதம் 8ம் தேதி பணிக்குச் சென்ற செவிலியரை டாக்டர் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்று உடலை ஆம்புலன்சில் வீசியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட செவிலியரின் தாயார் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் மற்றும் சக ஊழியர்கள் தலைமறைவாகினர்.

தலைமறைவான மருத்துவர் ஜெய்பிரகாஷ் உள்பட 6 பேரை காவலர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 5 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.